Tuesday, May 5, 2009

பாரதீய சனவிரோதக் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் தேர்தல்
பிரச்சாரப் பாடல்கள்





மானுட விடுதலைப் போற்றிடும் சின்னம்

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் தேர்தல்
பிரச்சாரப் பாடல்கள்



ஆதவனை அடிமையாக்கிய செங்கொடி

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் தேர்தல்
பிரச்சாரப் பாடல்கள்



ராசா ஆ ராசா

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் தேர்தல்
பிரச்சாரப் பாடல்கள்



மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் - மாற்றுப்பாதை காண்போம்

மாற்றுப்பாதை காண்போம் என்னும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பாடல்கள்











மாற்றுப்பாதை காண்போம்

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு சார்பில் 2009 பொதுத்தேர்தல் பிரச்சார இசைப்பாடல்கள் குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள பாடல்களை நீங்களும் கேட்கலாம்.











Saturday, May 2, 2009

P MOHAN ON TAMIL CLASSICAL LANGUAGE

வெட்ற்றி.... வெட்ற்றி... வெட்ற்றி

திமுக மூன்றெழுத்து

அதனை நிறுவிய

அண்ணாவுக்கு மூன்றெழுத்து

அவர் காட்டிய வழியான

கடமைக்கு மூன்றெழுத்து

என்றெல்லாம் வசனம் எழுதிய

திமுக தலைவர் கருணாநிதி

இப்போது நான் கெழுத்துக்கு

முன்னேறியிருக்கிறார்.

இதனையே தான் தம்பிகளுக்கு

(மகனையும் இவர் தம்பி என்று தான் விளிப்பார்)

வழிகாட்டியாக மாற்றியிருக்கிறார்.

தேர்தலுக்கு நான்கெழுத்து

இதில் வெற்றியீட்டும் உத்திகளான

கலகம் நான்கெழுத்து

கையூட்டு நான்கெழுத்து

ஏன்?

லஞ்சம் கூட நான்கெழுத்துதான்

வெற்றி தான் ஏனோ

மூன்றெழுத்தாக இருந்து

சங்கடப்படுத்துகிறது.

வெட்டு குத்து மூலம்

அதை ஈட்டுவதால்

`வெட்ற்றி' என

நான்கெழுத்தாக்கி விடலாம்

இதெல்லாம் விளையாட்டுக்கு

எழுதப்பட்ட வாசகங்கள் அல்ல.

தம்பிகளே எண்ணிப்பாருங்கள்

2006 -உள்ளாட்சித் தேர்தல்களை

உள்ளம் கொள்ளுங்கள்

தலைநகர் சென்னையில்

எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல

நம்மோடு ஒத்துப்போகாத

தோழமைக் கட்சியினரையும்

தலைதெறிக்க விரட்டினோம்

இதற்கு மேலும் துணிந்து நின்றவர்களை

தலைக்கட்டுப் போடும்படி வெட்டினோம்.

பட்டாக் கத்திகளின் பளபளப்பில்

தேர்தலை `அமைதியாக'

நடத்தினோம்.

நமது ``நடவடிக்கைகளைப்''

பொறுத்துக் கொள்ளாதவர்கள்

நீதிமன்றத்துக்குச் சென்றார்கள்.

நியாயமாகத் தான் தேர்தல்

நடந்ததென்று `சத்தியம்' செய்தோம்.

ஆனால்

அநியாயக்காரப் பத்திரிகைகாரர்களின்

புகைப்படங்கள்

நமக்குப் பகைப்படங்களாகி விட்டன.

சென்னை மாநகராட்சியின்

155 வார்டுகளில்

99 வார்டுகளுக்கு மறு தேர்தலுக்கு

நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது.

அதற்காக அப்படியே விட்டுவிடுவோமா?

வழக்கம் போல் ஆர்க்காட்டாரை விட்டு மிரட்டினோம்

எனக்கு டபேதாராக இருந்தவர் இல்லத் திருமணவிழாவில் மிரட்டல் அரங் கேறியது.

திருமண விழா தானே!அரசியல் பேச நமக்கு வசதியான இடம்

``நீதிபதிகள் எல்லாம் ஏதோ ஆகா யத்திலிருந்து குதித்தவர்களைப் போல சில பேர் நடந்து கொள்கிறார் கள். நான் எந்த நீதிபதியையும் பற்றி குறிப்பிட்டு குறை சொல்ல விரும்ப வில்லை. ஆனால் ஒவ்வொருவருக் கும் ஒரு எல்லை இருக்கின்றது.அந்த எல்லையோடு அவர்கள் நிற்க வேண் டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரை விமர்சிப்பதற்கு, அரசாங் கத்தைப் பற்றி தேவையில்லாமல் விமர்சித்து யோசனை கேட்பதற்கு சட்டப்படி அதிகாரம் கிடையாது.''

``நான் ஒன்றைச் சொல்கிறேன். முதல் அமைச்சர் அவருடைய அதிகா ரத்தைப் பயன்படுத்த வேண்டும். உயர்நீதி மன்றம் அவர்களுக்கு சட்டப் படி உள்ள விதிமுறைகளின்படி தீர்ப்புகள் வழங்க வேண்டும். அது தானே தவிர அவர்களே தமிழ்நாட்டை ஆள வேண்டுமென்று நினைப்பார் களேயானால் அது சரியல்ல.''

(05.02.2007முரசொலி)

அதிகாரத்தை எப்படி

` அன்போடு ' செலுத்துகிறார்

ஆர்க்காட்டார் பார்த்தாயா தம்பி!

இப்படிப்பட்ட

அன்புமிக்க அதிகாரங்களை

நாளையும் சொல்கிறேன் தம்பி...